தொண்டாமுத்தூர் அருகே வட மாநில இளைஞருக்கு கத்திக்குத்து - சிறுவன் உட்பட மூவர் கைது!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹிபுல் உசேன் என்பவர் நேற்றிரவு தொண்டாமுத்தூர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனர். சிறுவன் உட்பட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் பிரம்மாபிலைசேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21). இவர் கோவை தொண்டாமுத்தூர் குபேரபுரி பகுதியில் தனது சகோதரருடன் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ரஹிபுல் உசேன் தனது சகோதரர் முகமது பைசலுடன் கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூன்று பேர் ரஹிபுல் உசேனிடம் தகராறு செய்து, அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.

அப்போது சந்துரு என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹிபுல் உசேனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து 3 பேரும் தப்பியோடியுள்ளனர்.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய ஆலாந்துறையை சேர்ந்த சந்துரு (19), மற்றும் 16 வயது சிறுவனை மடக்கி பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காயமடைந்த ரஹிபுல் உசேன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற தொண்டாமுத்தூரை சேர்ந்த அருண்குமார் (20) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்துரு மீது பள்ளி மாணவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...