பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக சுதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.



அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:



கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இணை நோய் உள்ளவர்கள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...