பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக சுதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.



அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:



கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இணை நோய் உள்ளவர்கள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...