கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து முன்னணி நிபுணர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.


கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ என்ற தலைப்பிலான வேளாண் கருத்தரங்கு, ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தின் ஹால் ‘D’-யில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ICCIC தலைவர் ராஜேஷ் லுந்த், துணைத் தலைவர்கள் துரைராஜ், அண்ணாமலை, கௌரவ செயலாளர் பிரதீப் மற்றும் வேளாண் கமிட்டி உறுப்பினர் சரவணன் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை வெளியிட்டனர்.

அவர்கள் கூறுகையில், இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெறும் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுவதாக தெரிவித்தனர். இதில் முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வேளாண் தொழில் முனைவோர் மற்றும் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்று, நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், புதுமையான சாகுபடி முறைகள், நடைமுறை வேளாண் அறிவு மற்றும் வெற்றிகரமான விவசாய அனுபவங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மேலும், வேளாண் சுற்றுலா, வேளாண்மையில் தானியக்கமும் செயற்கை நுண்ணறிவும், கோகோ சாகுபடி மற்றும் ஊடுபயிர் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, செங்குத்து வேளாண்மை உள்ளிட்ட சமகால வேளாண் சார்ந்த முக்கிய தலைப்புகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வள்ளுவன், தமிழ்நாடு அரசின் வேளாண் சுற்றுலா விருது பெற்ற இறையழகன், மனோகரன் மற்றும் பாண்டுரங்க தவரே உள்ளிட்டோர் மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் வேளாண் துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள இந்த கருத்தரங்கு பயனுள்ள தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்க ஒருவருக்கு ரூ.600 (ஜிஎஸ்டி, தேநீர் மற்றும் மதிய உணவு உட்பட) பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கூகுள் படிவம் மூலம் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...