கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற்றார். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தவும், போதையில்லா கோவை, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட நல திட்டங்களை செயல்படுத்தவும் உறுதியளித்தார்.


Coimbatore: ரோட்டரி மாவட்டம் 3206-க்கு புதிய ஆளுநராக R.S. மாருதி பதவியேற்ற விழா கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குமரகுரு கல்வி குடும்பத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குனர் முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள் செல்லா ராகவேந்திரன், ராஜசேகர், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய ஆளுநராக பொறுப்பேற்ற R.S. மாருதி அனைவரது மத்தியிலும் கூறுகையில், "மிகப்பெரிய சமுதாய சேவை அமைப்பான ரோட்டரியில் வரும் நாட்களில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். போதையில்லா கோவை, ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்களை வரக்கூடிய நாட்களில் செயல்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், "இயற்கையை மேம்படுத்த ஒரு புதிய கட்டமைப்பை ரோட்டரி கட்டமைப்பாக உருவாக்க உள்ளது. சமுதாய மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நாங்கள் சேவைகளை முன்னெடுக்க உள்ளோம். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் ரோட்டரி அமைப்பு தொடர்ந்து பங்களிக்கும்" என்று உறுதியளித்தார்.


பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தனது உரையில், "சமுதாயத்திற்கு மிகப்பெரிய தேவை இது போன்ற ரோட்டரி அமைப்புகள். தங்களை அர்ப்பணித்து பல்வேறு சமூக பணிகளை முன்னெடுக்க உள்ள ஆளுநர் மாருதி உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுவோம். இவர்களின் சேவை மனப்பான்மை சமுதாயத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை" என்று கூறினார்.


விழாவில் பல்வேறு ரோட்டரி அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரோட்டரி மாவட்டம் 3206 கோவை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. புதிய ஆளுநர் மாருதியின் தலைமையில் இந்த சேவைகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...