பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர். இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.



கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நாரை உலர வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



அப்போது திடீரென குவிக்க வைக்கப்பட்டிருந்த தென்னை நாரின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் புகையை கட்டுப்படுத்த செல்வதற்குள், தீயாக பரவி மளமளவெனப் பற்றி எரியத் தொடங்கியது.



இதில் டிராக்டர், தென்னை உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரம் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது.



பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...