கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.


தாராபுரம்: தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் குப்பைகளை முறையாக அகற்றாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மதிவாணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆயிஷா, சுரபி, மணி, கார்த்திக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கர், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி முழுவதும் தார்ச்சாலைகள் மற்றும் கான்கிரீ்ட் சாலைகள் போடவேண்டும்.

ஊராட்சி தலைவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1 லட்சம் மட்டுமே என கணக்கில் காட்டியுள்ளார். தற்போது 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஊராட்சி நிர்வாகம் டெண்டர்கள்விட மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், 3 மாதங்கள் முன்பு ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறச் செல்லும்போது ஊராட்சியில் லஞ்சம் பெறப்படுகிறது. உடனடியாக, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...