கோவையில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில், புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

அண்மைக்காலமாக மக்களுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் வயது அதிகமானவர்களுக்கு மட்டும் இருதய கோளாறு ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திடீர் மாரடைப்பால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் (கே.ஜி) மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் நீதிமன்றம், தெற்கு வட்டாட்சியர் அலுவலக சாலை வழியே நடைபெற்றது.

இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் ஆபத்தானது, ஹார்ட் ஃபெயிலியர் என்பது மாரடைப்பல்ல, புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் .

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...