திருடிய நகைகளில் பங்கு போடுவதில் தகராறு - உதகையில் வசமாக சிக்கிய திருடர்கள்!

திருடிய நகைகளை பங்கு போடுவது தொடர்பாக, நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த திருடர்கள் கண்ணன், மோகன் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.



நீலகிரி: திருடிய நகைகளை பங்கு போடுவது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

உதகை நகரின் மைய பகுதியில் உள்ள திமுக அறிவாலயம் அருகே மதியம் 2 நபர்கள் மதுபோதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு பங்குபோட சண்டையிட்டு கொண்டிருந்தனர். அது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த உதகை B1 காவல்துறையினர் இருவரையும் பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் 5 சைன்கள், 5 மோதிரங்கள், 3 ஜோடி கம்மல்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், உதகை மிஸ்னரி ஹில்ஸை சேர்ந்த கண்ணன்(வயது50), உதகை உட்லாண்ட்ஸ் குப்பத்தை சேர்ந்த மோகன் (வயது57) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் நேற்று இரவு உதகை கீழ்தலையாட்டு மந்தை சேர்ந்த திம்மைய்யா(வயது43) என்பவரது வீட்டில் நகைகளை திருடியதும் தெரியவந்தது. இரவில் திருடிய நகைகளை இன்று மதியம் பங்கு போடும்போது தகராறு ஏற்பட்டபோது அவர்கள் சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்த 5 சவரன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில், வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...