தாராபுரம் அருகே இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பல்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 7 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஓடும் அமராவதி ஆறு, தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது.

இந்த ஆற்றின் கரையோர பகுதியில் இருபுறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளியமரம், சவுக்கு, தேக்கு மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறையினர் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கியம் கூடுதுறை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மரங்களை வெட்டி கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...