குன்னூரில் பேக்கரியில் நுழைந்த கரடி - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

குன்னூர் அருகே உணவு தேடி பேக்கரிக்கு வந்த கரடி, நீண்ட நேரம் போராடியும் கடையை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் சமீபகாலங்களாக கரடிகள், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது அதிகரித்து உள்ளது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் கரடி ஒன்று நேற்று இரவு அப்பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்குள்ள பேக்கரியின் கதவை திறக்க முயன்றது.



நீண்ட நேரம் போராடியும், பேக்கரியின் கதவை திறக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அந்த கரடி, அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...