தரமற்ற முருங்கை நாற்றுகளை கொடுத்து ஏமாற்றிய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் - பல்லடத்தில் விவசாயி குற்றச்சாட்டு!

பல்லடம் அருகே செட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட 1500 முருங்கை நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் பூ பூக்காமல் இருப்பதால் தரமற்ற நாற்றுகளை கொடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக விவசாயி ஈஸ்வரன் தோட்டக்கலைத் துறையாக அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே பொங்கலூரில் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட்ட 1500 முருங்கை நாற்றுகள் ஒன்றரை வருடம் ஆகியும் காய்க்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொங்கலூர் தோட்டக்கலை துறை சார்பில் 50 விவசாயிகளுக்கு இலவசமாக முருங்கை நாற்று, மாஞ்செடி, கொய்யாசெடி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

இதில் செட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவருக்கு 1500 முருங்கை நாற்றுகள் வழங்கியுள்ளனர். சொட்டுநீர் பாசன முறையில் முருங்கை நாற்றுகளை பயிரிட்டு மூன்று ஏக்கருக்கு ரூபாய் 90 ஆயிரம் வரை செலவு செய்து வளர்த்து வந்துள்ளார்.



இந்த நிலையில் முருங்கை நாற்றுகள் நடவு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் ஒரு செடியில் கூட பூ பூக்காமல் இருந்ததால் காய்ப்பு திறன் இல்லை என தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவசாயி ஈஸ்வரன் முறையிட்டுள்ளார்.



மேலும் இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கு சொந்தமான மீதமுள்ள நிலத்தில் தனியார் நிறுவனத்தின் முருங்கை விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். தனியாரில் வாங்கிய முருங்கை விதைகள் நல்ல காய்ப்பு திறனோடு உள்ளதாகவும், நல்ல லாபம் அளித்துள்ளதாகவும் விவசாயி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, தரமற்ற போலி முருங்கை நாற்றுகளை கொடுத்ததால் ஏமாற்றம் அடைந்த விவசாயி ஈஸ்வரன் காய்ப்பு இல்லாத முருங்கை செடிகளை அழிப்பதற்கும் 20,000 வரை செலவாகும் என்பதால் செடிகளை அப்படியே விட்டு வைத்துள்ளார்.



இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயி ஈஸ்வரன் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுபோன்று தரமற்ற போலியான விதைகளையும் நாற்றுகளையும் கொடுத்து விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம் எனவும் தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரியிடம் கேட்டதற்கு விவசாயி ஈஸ்வரனின் நிலத்தில் மண் தரமாக இல்லை எனவும் முருங்கை செடிகள் காய்ப்பு பிடிக்க முறையான வழிமுறைகளை கூறியுள்ளதாகவும் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...