கோவை ஏர்போர்ட்டில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமனம் - விமான நிலையம் ஆணையகம் நடவடிக்கை!

கோவை விமான நிலையத்தில் காலியாக இருந்த ஸ்கேனர் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு 4 ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டுப் பிரிவில் 350 டன் சரக்குகள் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சரக்குகள் கையாளப்படுகின்றன.

மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

புதிய விதியின்படி ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’பணிக்கு ஊழியர்கள் நியமிக்க காலதாமதம் ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது நான்கு ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் கோவையிலிருந்து அனுப்புவது மற்றும் கோவைக்கு அனுபப்படுவது என இரண்டும் சேர்த்து 700 டன் சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. விமான நிறுவனங்களே ஸ்கேனர் ஆபரேட்டர்களை நியமித்து வந்த நிலையில், விமான நிலைய ஆணையகம் புதிய விதியை அமல்படுத்தியது.

அதன்படி விமான நிலைய ஆணையகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் அமர்த்த வேண்டும். கோவையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கடந்த 3 மாதங்களாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதந்தோறும் கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படும் 350 டன் சரக்குகள் மட்டும் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலைய ஆணையக தலைமையகம் கோவைக்கு 4 ஸ்கேனிங் ஆபரேட்டர்களை நியமித்துள்ளது. அதில், ஒருவர் நேற்று முன்தினம் பணியில் சேர்ந்து விட்டார். மீதமுள்ளவர்கள் சில நாட்களில் பணியில் சேர உள்ளனர். மே மாதம் முதல் நான்கு பேரும் பணியாற்ற தொடங்குவார்கள்.

இதனால், மீண்டும் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து கையாளும் அளவு பழைய நிலைக்கு திரும்பும். கோவை விமான நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட ஸ்கேனிங் ஆப்ரேட்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஊழியர்கள் நேர்காணல் நடவடிக்கையை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...