கோவை வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தணிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில், கோடைக்காலம் காரணமாக ஏற்படும் வறட்சியை சமாளிக்க வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், தண்ணீர், உணவுத் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்துள்ளது.


கோவை: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யானைகள் ஒன்று கூடும் இடமான யானை மடுவு உள்ளிட்ட 2இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உப்புக்கட்டிகளும் அருகில் வைக்கப்பட்டுள்ளது. கோவை வனத்துறை சார்பில் கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...