கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில், மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மேற்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தீரன் K.S.குழந்தைவேலு மற்றும் மாவட்ட பொருளாளர் தீரன். M.S.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1.கோவை மேற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய (பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், S.S.குளம் ஒன்றியம்) வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கோவை மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

2.ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா முடித்தவுடன் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் கொங்கு சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் தீரன்.E.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி செயலாளர் தீரன் மருதாச்சலம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தீரன் வேலு, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தீரன் வரதராஜன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய துணை செயலாளர் தீரன் பொன்னுசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் தீரன் கொய்யா மரத்தோட்டம் மணி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் தீரன்.பாலு (எ) பாலகிருஷ்ணன், பெரியநாயக்கன் பாளையம் KMDK ஒன்றிய பொறுப்பாளர்கள் தீரன்.கணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் தீரன்.பொன்னுசாமி நன்றியுரை கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...