குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாகவுள்ள குவாலிட்டி மேனேஜர் (Quality Manager)பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள குவாலிட்டி மேனேஜ்ர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) மருத்துவமனையில் குவாலிட்டி (Quality Manager) பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில். தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பணி குறித்தான விரிவான விபரங்களை கோவை மாவட்ட Coimbatore.nic.in இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 21.04.2023 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர்,அரசு மருத்துவகல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயமுத்தூர்-641015 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 24.04.2023- ம் தேதி 10 மணிக்கு கோவை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...