திருப்பூர் அருகே குப்பைகள் நிறைந்த பாறைக்குழியில் திடீர் தீவிபத்து!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் - அவினாசி சாலை, அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழி உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது அங்கு குப்பை கொட்டப்படுவதில்லை.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு குப்பைகள் கொட்டப்பட்ட பாறைகுழியில் தீப்பற்றி எரிவதாக திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.



தகவலையடுத்து இரு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை ஒரு மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.



அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...