கோவை அரசு கல்லூரியில் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் சார் அறிவியல்துறை மன்றவிழா தொடங்கியுள்ளது. அதில் மாணவர்கள் உருவாக்கிய நம்பிக்கை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசியல் சார் அறிவியல் துறை சார்பில் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் மாணவர்கள் உருவாக்கிய பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துக் கொண்டார்.



பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. கல்லூரி வாழ்க்கையில் உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இங்கு கற்றுக்கொள்ளும் தனித்திறமைகள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உதவும், என்றார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் உலகி, அரசியல் சார் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...