தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம் என மற்ற மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக 40 பேருந்துகளும் என கோவையில் இருந்து மொத்தமாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...