சூலூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு!

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பொது பாதையை தனிநபர் இருவர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு வீரங்காடு பகுதியை சுற்றிலும் சொந்தமாக தோட்டம் உள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் உள்பட 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தை நாடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...