தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் 24.02.2017 மற்றும் 25.02.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. புகைப்படக்கண்காட்சியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

மேலும், இந்தப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்களும் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா குறித்த புகைப்படங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுளளன. இக்கண்காட்சியினை பொது மக்கள் பார்த்து அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் பயன்பெரும் வகையில் உள்ளது.

இக்கண்காட்சி பணியினை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார்  ஆகியோர் மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...