பல்லடம் அருகே குப்பைகளுக்கு தீவைத்த ஊராட்சி நிர்வாகம் - கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகளுக்கு ஊராட்சி ஊழியர்கள் தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதக்கணக்காக குப்பைகளை கொட்டி மாதத்திற்கு ஒரு முறை தீ வைப்பது வாடிக்கை.

இந்நிலையில், முப்பது நாட்களுக்கும் மேலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள்,துணி கழிவுகள் என சுமார் இரண்டு டன் அளவுக்குகுவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவைக்கப்பட்டது.



3 மணி நேரத்துக்கு மேலாக குப்பையில் தீ பற்றியெரிந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறிய அளவுக்கதிமான கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதியே புகை மூட்டமாகக் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள், குப்பைக்கு வைக்கப்பட்டிருந்த தீயினை தண்ணீரை அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...