உணவகத்தில் பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி - கோவையில் தந்தை, மகன் உட்பட 4 பேர் கைது!

கோவையில் உணவகத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகக்கூறி ரூ.20 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: கோவை: உணவகத்தில் பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி செய்த கோவையில் தந்தை, மகன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

கோவை காரமடை உள்ளிட்ட இடங்களில் டி.என்.43 ஹோம்மேட் என்ற உணவகம் உள்ளது. கொச்சியை சேர்ந்த முஜிமோடு, அவருடைய மகன் செய்ன், மனோஜ் மொய்டு, ஆனியன் செபி ஆகியோர், இந்த ஓட்டலில் பங்குதாரர்களாக சேர்த்து லாபத்தில் பங்குதருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களின் வார்த்தையை நம்பி, கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் ரூ.13 கோடி கொடுத்து பங்குதாரராக சேர்ந்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த கோபிகிருஷ்ணா, திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த பயாஸ் உள்ளிட்ட பலரும் லட்சக்கணக்கில் பணம் அளித்துள்ளனர். இந்த பணத்தை முஜி மற்றும் 3 பேர் வேறு,வேறு கணக்குகளில் அனுப்பி மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் உள்பட பலரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார்.

அப்போது உணவகம் நடத்துவதாகவும், பங்கு தருவதாகவும் பலரிடம் ரூ.20 கோடிக்கும்மேல் மோசடி செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக முஜிமோடு, செய்ன், மனோஜ்மோடு, ஆனியன் செபி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.17 லட்சம் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே முஜி மோடு மீது ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளன. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணத்தை இழந்த பாலகிருஷ்ணன், கோபிகிருஷ்ணன், பயாஸ் ஆகியோர் தற்போதைய பங்குதார்களாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...