மூலனூர் அருகே சரக்கு வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே சரக்கு வாகனத்தில் ஏறி 8 வயது சிறுவன் எஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென வாகனம் ஓட ஆரம்பித்ததால், பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், இவரது மனைவி மற்றும் 8 வயது மகன் எஸ்வந்த் ஆகியோருடன் மூலனூர் அருகே உள்ள ஆலம்பாளையம் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்றிரவு இரவு 8 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதமாக டாட்டா ஏஸ் வாகனம் கிளம்பியது. இதனால் பின் சக்கரத்தில் சிக்கிய எஸ்வந்த் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக சிறுவன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் எஸ்வந்த் காலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் அதன் சாவி இருந்ததும், வாகனம் கியரில் இருந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...