பெண் காவலர்களின் பொன்விழா - கோவையில் 50 கி.மீ சைக்கிள் பயணம்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கோவையில் 50 கி.மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.



கோவை: பெண் காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்யும்விதமாக கோவையில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது.



'நோ ஹெல்மெட், நோ ரைடு ... ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ்' என்ற விழிப்புணர்வுடனும் இந்த சைக்கிள் பயணம் நடந்தது. பிரபல சைக்கிளிங் வீரரான விஷ்ணு ராம் என்பவர் முயற்சியில் இந்த சைக்கிள் பயணம் நடந்தன.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சுகாசினி, சைக்கிளிங் வீரர் விஷ்ணு ராம், காவலர்கள், பொதுமக்கள் என 120 பேர் கலந்துகொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சைக்கிள் பயணம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், பேரூர் வழியாக செல்வபுரம் வந்தடைந்தனர். 50 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...