உக்கடம் அருகே சாலையோரங்களில் நிற்கும் இருசக்கர வாகனங்களில் தொடரும் பெட்ரோல் திருட்டு!

உக்கடம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள உக்கடம் காவல் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சித்த போது முடியவில்லை. இதையடுத்து பார்த்த போது, பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காலையில் தான் 3 லிட்டர் நிரப்பிக்கொண்டு வந்ததாகவும், ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார். கோவையில் அண்மை காலமாக இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது, உக்கடம் பேருந்து நிலையமானது 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும்.

கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் பெட்ரோல் திருட்டு தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...