கோவை பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், மற்றும் பாதாள சாக்கடை திட்ட சுத்தகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.



அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மேலும் பொள்ளாச்சி நகராட்சியை முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு வர செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகள் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

மேலும் பொள்ளாச்சி நகராட்சியை மேம்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து அறிக்கை வழங்கி பொள்ளாச்சி நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...