உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் - போலீசார் தடுத்ததால் பரபரப்பு!

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.



இதற்கு கண்டனம் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



நகராட்சி பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர், ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.



அப்போது, அவர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கே .தென்னரசு மாவட்டத் தலைவர், கோவிந்தராஜ், ஜனார்த்தனன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம், மாநில பொது குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி, கே.கண்ணுசாமி, ஆர் முருகானந்தம், நகரத் தலைவர் கோ. ரவி,துணைத் தலைவர் ஆர் முத்துக்குமார், வட்டார தலைவர்கள் கனகராஜன், ஏ எஸ் வெங்கடேஷ்,பி. செல்லகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் சின்னச்சாமி, குடந்தை கண்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...