தாராபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் படுகாயம்!

தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் கிருஷ்ணா சிங். இவர் தனது மனைவி சங்கீதாவுடன், காரில் வால்பாறையில் இருந்து உடுமலை ரோடு கிருஷ்ணாபுரம் வழியாக எடப்பாடி நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது உடுமலை விழா மரத்துப்பட்டியை சேர்ந்த ரத்தினசாமி, சுப்பிரமணி மற்றும் மிதுன் ஆகியோர் வெள்ளகோவில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வால்பாறையில் இருந்து வந்த கிருஷ்ணா சிங், சிக்னாபுரம் பகுதியில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவிலில் இருந்து உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சிக்னாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களில் இருந்த ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த இரண்டு கார்கள் மோதிய விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...