தாராபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் படுகாயம்!

தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் கிருஷ்ணா சிங். இவர் தனது மனைவி சங்கீதாவுடன், காரில் வால்பாறையில் இருந்து உடுமலை ரோடு கிருஷ்ணாபுரம் வழியாக எடப்பாடி நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது உடுமலை விழா மரத்துப்பட்டியை சேர்ந்த ரத்தினசாமி, சுப்பிரமணி மற்றும் மிதுன் ஆகியோர் வெள்ளகோவில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வால்பாறையில் இருந்து வந்த கிருஷ்ணா சிங், சிக்னாபுரம் பகுதியில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவிலில் இருந்து உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சிக்னாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களில் இருந்த ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த இரண்டு கார்கள் மோதிய விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...