பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சீருடை அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக நடந்து வந்தனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பைவ் கார்னர், மகாலிங்கபுரம் ரவுண்டானா, கோவை சாலை வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து புதிய திட்டை சாலை வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது.



இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக கம்பிரமாக நடந்துவந்தனர்.



அப்போது, பேரணியுடன் வந்த ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.



இந்த பேரணியில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



இந்தப் பேரணியையொட்டி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...