தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் புதிதாக வெட்டப்பட்டு வந்த கிணற்றில், கரூர் அருகே ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு அமைத்து வருகிறார்.

கிணறு வெட்டும்பணியில் காணிக்கம்பட்டி கரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், சில தொழிலாளர்கள் கிணற்றின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் கூடாரத்தில் தங்கியிருந்த கரூர், பாளையம் அருகே உள்ள ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), என்பவரைக் காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்து 70அடி ஆழமுள்ள கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பார்த்தனர். அப்போது இறந்த நிலையில் பெருமாள் கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புதுறையினர் மூலம் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொழிலாளி பெருமாள் இரவில் தவறுதலாக கிணற்றுப் பக்கம் சென்று தவறி விழுந்தது இறந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...