கோவையில் 'லியோ' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் - நடிகை திரிஷா பதில்

கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பினர். லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருந்துதான் வருவதாகக் கூறிய திரிஷா, மற்ற விஷயங்களை லியோ பட நிகழ்ச்சியின்போது பேசுவோம் என்று கூறினார்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் மாலில் நடைபெற்றபொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சியில் நடிகை திரிஷா பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.



அப்போது, திரிஷாவிடம் விஜய் நடித்து வரும் LEOபடத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டு, LEO, LEO என முழக்கமிட்டனர். ஆனால், திரிஷா அது குறித்து பதிலளிக்காமல்,நான் தற்போது LEO பட சூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்லா இருக்காங்க.மற்றவற்றை LEO நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என்றார்.



ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார்.



பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதைபோல் வரிசைப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டதற்கு,PS2 புரோமோசன் என்பதால்,என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்) தான் என திரிஷா பதிலளித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ்.. இரண்டாவது உங்களுடைய சாப்பாடு.. மூன்றாவது கோவையில் எப்போதுமே இருக்கும் அமைதி...என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...