நாயகன் 2ம் பாகத்தில் நடிக்க ஆசை ..! - கோவையில் பிஎஸ் 2 விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேச்சு

கோவையில் பிஎஸ்-2 புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி கான்பிடன்ஸ் உடன் இருப்பார். திரிஷா அசால்டாக இருப்பதோடு எல்லாரையும் மயக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார் என்று பேசினார்.


கோவை சரவணம்பட்டியில் பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் அன்பு பாசமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக மிருதன் பட சூட்டிங்கிற்காக கோவை வந்தபோது, சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததால் திகைத்து போனேன்.



கோவை இரண்டாவது வீடு என மனதார சொல்கிறேன். மக்கள், ரசிகர்கள், எப்போது அன்பாக நடந்து கொள்கின்றனர். பொன்னியின் செல்வன்- 2 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. பிஎஸ்-1 திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்து இருக்கின்றது.



இதே மாதிரி பிஎஸ்-2க்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நிறைய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுபோது பிஎஸ்-1 எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள், பிஎஸ்-2 உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவிப்பேன்.



இது மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த படம். தேவையான படம் என்பது உங்களுக்கு தெரியும். என்னை இங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். மனைவி கிட்ட மாட்டிகிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். மாட்டிக்கொள்ளாமல் என்ன வழியோ அதை பார்க்க வேண்டும்.

இயக்குநர் மணிரத்னம் எடுத்த படத்தில் நாயகன் பார்ட் - 2 படத்தில் நடிக்க ஆசை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி பூ எனும் நிஜமான நடிகையாகவே மாறிவிட்டார்.

நடிகர் கார்த்தி கான்பிடன்ஸ் உடன் இருப்பார். திரிஷா அசால்டாக இருப்பதோடு எல்லாரையும் மயக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார். எனக்கு சினிமா குருவும் அப்பாதான். சின்ன தவறுகளை கூறினாலும் அதை கவனித்து அவர் சரி செய்வார்.

இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...