பக்ரைனில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர் - நேரில் நலம் விசாரித்த அமைச்சர் செஞ்சிமஸ்தான்!

பக்ரைனில் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த புதுக்கோட்டை இளைஞர் வீரபாண்டி மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று நலம் விசாரித்து, ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார்.


புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டுக்கு சென்று வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக மீட்க முடியாமல் அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார்.

இது தொடர்பாக, வீரபாண்டியின் பெற்றோர், வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால், இளைஞர் வீரபாண்டி அங்கிருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் வீரபாண்டியை, வெளிநாடு தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அரசு சார்பில் நலம் விசாரித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில் மஸ்தான் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பக்ரைன் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றைக்கு உயிருக்கு போராடக்கூடிய நிலையில் தந்தை சுப்பையா மற்றும் தாய் அழகி இருவரும் நேரடியாக தன்னுடைய மகனின் நிலையை தெரிவித்தனர்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த சகோதரனை அங்கிருந்து மீட்டு, தமிழக அரசு சார்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்றைக்கு அனுமதிக்கப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் வகையில் முதலவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான வசதிகளை செய்து வருகிறார். இளைஞர் வீரபாண்டி உடல் நலம் குணமாக இந்த மருத்துவம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து அவரை பார்த்தற்கும் தற்போது மருத்துவமனையில் பார்ப்பதற்கும் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2017ஆம் ஆண்டு, வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும் என்று ஒரு ஆணையும் அமைத்தார். அங்கே வேலைக்காக சென்றவர்கள் உயிரிழக்க நேரிடும் நிலையில், அவர்கள் உடல்கள் இங்கு எடுத்துவரப்பட்டு அவர்கள் பெற்றோர் இடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு தனித் துறை இருக்கும் காரணத்தினால் சூடான், இந்தோனேசியா, உக்ரைன், துபாய் போன்ற நாடுகளில் வேலைக்குச்சென்று சிக்கித் தவிப்பவர்களின் நிலையை அறிந்தால், அவர்களை மீட்டு வர அயலர்கள் தமிழர்கள் நல வாரியம் என்று தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



அமைச்சரின் (செஞ்சி மஸ்தான்) சொந்த செலவில் இருந்து 50,000 ரூபாய் வீரபாண்டியன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டியின் தாய் அழகு பேசுகையில், என் மகனை பக்ரைன் நாட்டுக்கு அனுப்பினோம். அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், அமைச்சர் மூலமாகமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அமைச்சர் சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். எனது மகன் வீரபாண்டி நல்ல முன்னேற்றத்துடன் நலமாக உள்ளார், என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...