மதுபோதையில் சாக்கடை விழுந்த தொழிலாளி பலி - மடத்துக்குளம் அருகே சோகம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மதுபோதையில் சாக்கடையில் விழுந்த கூலித்தொழிலாளி முருகன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்(வயது 56). கூலித்தொழிலாளி. இவர் மது போதைக்கு அடிமையாகி அதிக அளவில் மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அதிக மதுபோதையில் சாமராயப்பட்டி நூலகத்தின் எதிரில் உள்ள சாக்கடை கால்வாயின் திட்டு மீது அவர் அமர்ந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் அவர் விழுந்துள்ளார்.



உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகன், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...