ஆட்டோ ஓட்டவும், ஸ்டாண்டில் நிறுத்தவும் சாதி, மத ரீதியாக பாகுபாடு - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவதற்கும், ஓட்டுவதற்கும் சக ஆட்டோ ஓட்டுனர்கள், சாதி, மத ரீதியாக தடுப்பதாக கூறி, 4 ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தினருடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: துடியலூர் அருகே ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்தவும், ஓட்டவும் சாதி, மத ரீதியாக தடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்துவதற்கும் ஓட்டுவதற்கும் இதர ஆட்டோ ஓட்டுநர்கள் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தடுப்பதாக கூறி நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஏற்கனவே இது குறித்து ஆர்டிஓ மற்றும் துடியலூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே ஒருமுறை மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இரண்டாவது முறையாக கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயன்றதாகவும், காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பகுதியில் தொடர்ந்து தங்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஆட்டோ ஓட்டுவதற்கு அங்குள்ளவர்கள் தடுப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...