திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் விஜிலா. இவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வியாளருக்கான சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் சேவை விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் விஜிலா. இவர், பல்வேறு பணியிடை பயிற்சிகளில், கருத்தாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆங்கில பாடத்துக்கான, கையேட்டினை வடிவமைத்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் தலைமை வகித்து விருது வழங்கினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...