பூத்தொட்டிக்குள் பதுங்கியிருந்த நாகபாம்பு - கோவை போத்தனூரில் பரபரப்பு

கோவை போத்தனூர் திருமலை நகரில் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூத் தொட்டிக்குள் நாகப்பாம்பு மறைந்திருந்தது. அந்த பாம்பை பிடித்து, உக்கடம் பெரியகுளம் மேற்குகரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது.



கோவை: கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் பாம்புகள் உட்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் தொடர்ந்து, குளிர்ச்சியான இடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது அதிகரித்துவருகிறது.



அந்த வகையில், கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூத்தொட்டிக்குள் நாகபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப்பார்த்த அவ்வீட்டார், கிரீன்கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து? அங்கு சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன், அந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட அந்த பாம்பு சுமார் நான்கரை அடி நீளம் இருந்தது கண்டு வீட்டார் உட்பட அக்கம்பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பின்னர், பிடிபட்ட பாம்பு, உக்கடம் பெரியகுளம் மேற்குகரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர்நிறைந்த பகுதியில் விடப்பட்டது. இப்பகுதியிலேயே கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

குழந்தைகள் அனைவரும் மாலை நேரங்களில் விளையாடி கொண்டிருப்பதாலும், அடுத்த வாரத்தில் பள்ளி விடுமுறை விடப்படுவதால் குழந்தைகள் அனைவரும் அதிக நேரம் அப்பகுதியில் விளையாட வாய்ப்புள்ளதாலும், குடியிருப்பு பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...