கோவையில் இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து - ஒருவர் பலி

கோவை வடமதுரை தடாகம் சாலையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கேசவன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். வெல்டராக வேலை செய்து வருகிறார்.

இவர் தனது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வடமதுரை தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி கேசவனின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கேசவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் சிவகுருநாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...