பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக சிவானந்த காலணி பகுதியில் பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுமெனவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் பாலைவனமாகும் அபாயம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...