உடுமலை அருகே மக்கள் தொடர்பு முகாம் - மலைவாழ் மக்களின் மனுக்களுக்கு தீர்வு!

உடுமலை அடுத்துள்ள சின்னக்கல்லார் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில், ஆதார் அட்டை திருத்தம், ஸ்மார்ட்ரேஷன்அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய வனச்ச ரகங்கள் உள்ளன.

இதில், 18க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய திட்டமாக, அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும், மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது இத்திட்டத்தின்கீழ் சின்னார் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் முகாம் நடந்தது.



கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தாசில்தார் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், குடிமைபொருள் தாசில்தார் கார்த்திகேயன், உடுமலை பி.டி.ஓ., சுப்ரமணியம், எரிசனம் பட்டி முதன்மை சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் உமாராதிராணி, வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



இந்த முகாமில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, ஆதார் அட்டை திருத்தம், பிறப்பு, இறப்பு சான்று, வாக்காளர் அட்டையுடன் அடையாள ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும், டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்ற, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மலைவாழ் மக்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது.

வனத்துறை சார்பில், வனத்தீ ஏற்படாமல் பாதுகாத்தல் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...