உடுமலை அருகே குடிமங்கலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை!

குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளை சேர்ந்த மக்கள், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

திருமூர்த்தி மலை கீழ்மட்ட தொட்டியில் மின் மோட்டாரை சரி செய்ய போதிய பணம் இல்லை என கூறிவிட்டனர். ஏற்கனவே ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தீர்கள். இன்றுவரை அரசு அதிகாரிகளிடம் இருந்து நடவடிக்கை இல்லை.

எனவே கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...