போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது!

திருப்பூர் - அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர், துணை மேலாளர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் - அவிநாசி சாலையில் தனியார் வங்கியில் (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம்) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும் போது அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்டு கணக்கு தணிக்கையின் போது ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்டதை கண்டறிந்த மண்டல மேலாளர் சரண் சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.



இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் சிவா, உதவி மேலாளர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...