பவானியின் குறுக்கே கேரள அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை மாவட்ட மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 25-வது கோவை மாவட்ட பொதுக்குழு இன்று நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்க்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார்.

இதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளராக கணேசமூர்த்தி, கழகத் துணைப் பொதுச் செயலாளராக ஏ.கே.மணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டாக்டர் க.சந்திரசேகரன், மு.பூமிநாதன், க.ஜெய்சங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு, வருங்காலத் தமிழகத்தை வளமாக்கிட வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே, தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

 

பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சித்ததாலும், தமிழ்நாட்டின் ஆறுகள் வறண்டுவிட்டன. போதுமான தண்ணீர் இன்றிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர் இழந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணப் பலன்கள் இரண்டு ஹெக்டேருக்கு அதாவது ஐந்து ஏக்கருக்குக் கீழே உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பயன்கள் வழங்க வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...