கோவை அருகே சாலையில் சென்ற காரில் தீவிபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பசுபதி ஆகியோர் மருத்துவ தேவைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கொண்டிருந்தனர்.



கணியூர் டோல்கேட் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதில் தீப்பிடித்தது. மளமளவென காரில் தீ பரவியதால் அதிர்ச்சியடைந்த இருவரும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே வந்தனர்.



கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் பாதிப்புகளின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் மற்றும் பசுபதி கோவை செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். காரில் தீபிடித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...