கோவை அருகே சாலையில் சென்ற காரில் தீவிபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பசுபதி ஆகியோர் மருத்துவ தேவைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கொண்டிருந்தனர்.



கணியூர் டோல்கேட் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதில் தீப்பிடித்தது. மளமளவென காரில் தீ பரவியதால் அதிர்ச்சியடைந்த இருவரும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே வந்தனர்.



கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் பாதிப்புகளின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் மற்றும் பசுபதி கோவை செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். காரில் தீபிடித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...