உடுமலை அருகே காந்தலூரில் 'சுற்றுலா விழா 2023' தொடக்கம் - மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் கோலாகலம்

உடுமலை அருகே காந்தலூரில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் சுற்றுலா விழா-2023 கோலாகலமாகத் தொடங்கியது. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள மறையூர் காந்தளூர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

மேலும், சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. காந்தலுார், மூணாறு, மறையூர், சின்னாறு ஆகியவை சுற்றுலா தலங்களாக உள்ளன. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

பசுமை சூழ்ந்த மலைகள், சந்தன மரக்காடு,வனப்பகுதி, பழங்கால பாறை ஓவியங்கள், சிற்பங்கள், முனியறைகள், ஆப்பிள் தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் மர வீடுகள், சொகுசு ஓட்டல்கள் என, இப்பகுதிகளில், 52 சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது.



சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 29ம் தேதி வரை காந்தலுார் சுற்றுலா விழா-2023 கொண்டாடப் படுகிறது.

இதற்கான துவக்க விழாவில் வனத்துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது.



சுற்றுலா விழாவை முன்னிட்டு, வனப்பகுதியில் என்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.



டிரக்கிங், கேம்ப் பயர், மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், தமிழகம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டன. மேலும், சீதையுடன் ராமன் வசித்த பகுதியாக காந்தலூர் குறிப்பிடப்படுவதால், அனைத்து விடுதிகள், சுற்றிலும் உள்ள கிராமங்களில், சீதா ராமரை வணங்கும் வகையில், ராமர்வில் வடிவில் ஆயிரக்கணக்கான திருவிளக்குகள் மலைப்பகுதியில் ஏற்றப்பட்டுள்ளது.

Newsletter

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...