கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில்‌ கழிவு வெளியேற்றும்‌ இடத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில்‌ சிசிடிவி கேமராக்களை பொருத்தி கழிவுநீர் வாகனங்களை கணிகாணிக்கவும்‌, சுற்றுசுவர்‌ அமைக்கும்‌ பணியை விரைவாக செய்து முடிக்கவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து அதே பகுதியில்‌ உள்ள சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றும்‌ நிலையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மழை காலங்களில்‌ மழைநீருடன்‌ கழிவுநீர் கலக்காமல்‌ தனியாக குழாய்‌ அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும் அதே பகுதியில்‌ உள்ள மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அதிகாரிகளும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்‌.



இதேபோல் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, டாடாபாத்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவில்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



பின்னர் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌

மேம்பாட்டு பணிகளின்‌ ஒரு பகுதியாக வாகனங்களின்‌ பயனற்ற உதிரி பாகங்களை கொண்டு மறுசுழற்சி முறையில்‌ மாதிரி கார்‌, கிராமபோன்‌, அடி தண்ணர்‌ குழாய்‌, பழைய தொலைபேசி போன்றவை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...