வால்பாறையில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை - நகராட்சி தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல கோடி மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



அதை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.45 லட்சம் மதிப்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.



உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், 4ஆவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் 12ஆவது வார்டு உறுப்பினர் அன்பரசன் 17ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...