கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.


கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ இன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் கோவை மாநகர போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை கடந்த ஆண்டு அக் 27 ல் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) க்கு மாற்றப்பட்டது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கோவை மாநகரில் பொதுமக்கள் கூடும் ரயில்நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், முகமது தல்ஹா, பைரோஷ், முகமது ரியாஷ், நவாஷ், அஷ்ரப் கான் ஆகியோர் மீது என்.ஐ.ஏ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...