ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களை அலறியடித்து ஓட வைத்த அதிமுக நிர்வாகிகள்

வால்பாறையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவின் போது அதில் பங்கேற்றிருந்த அதிமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தொண்டர் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு நகர கழக செயலாளர் மயில் கணேஷ் தலைமை வகித்தார். பொன்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாய அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் சீதாராமன், ஜெபராஜ், அமீது ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர்.

இதைத்தொடர்ந்து ஜெபராஜ் பேசுகையில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவிற்கு இணையாக 301 ரூபாய் சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசுவிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அமீது பேசுகையில், முன்னால் பேசிய பொன் கணேசும், ஜெபராஜும் பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து, நாங்கள் என்ன தவறாக பேசினோம் என்று இருதரப்பினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதில் நாற்காலிகளை தூக்கி எறிந்து மோதல் ஏற்பட்டதால் தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். சில மணிநேரம் கழித்து மீண்டும் கூட்டம் துவங்கியது. 

இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், தமிழகத்தில் நிலையான அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்து 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் வழியிலேயே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படும். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 250 பேருக்கு ஒருவாரத்தில் இலவச பட்டா வழங்கி அரசு மாணியத்தில் வீடு கட்டித்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல செயல்பட வேண்டும்" என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் நரசப்பன், வழக்கறிஞர் பெருமாள், கோழிக்கடை சண்முகம், மிச்சர் முருகன், சசி, மோகன், செல்வகணேஷ், நெல்லைச்செல்வன் ஆகியோர்களும் கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...